விதிமுறைகள் / இட ஒதுக்கீடு விதிகள்:

விதிமுறைகள் / இட ஒதுக்கீடு விதிகள்:
  1. கழக விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்கள் முன்பே முன்பதிவு செய்யப்படும் .
  2. முன்பதிவு மைய வேலை நேரம் காலை 06:00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை செயல்படும்.  * முன்பதிவு மையங்களின் வேலை நேரம் இடத்திற்கு இடம் மாறுபடலாம்.
  3. 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைக்கு அரை கட்டணத்திற்கு தகுதியானவர்கள். 130 செ.மீ உயரத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயணத்தின் போது அசல் வயது சான்றிதழ் காண்பிக்கப்படவேண்டும். இல்லையென்றால் முழு கட்டணம் வசூலிக்கப்படும்.
  4. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒற்றை குழந்தை முன்பதிவின் போது அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தைகள் எப்போதும் பெரியவர்களுடன் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.
  5. முன்பதிவு செய்யப்பட்ட பயண சீட்டை மாற்றத்தக்கவை அல்ல.
  6. ரயில்வே நேரம் பின்பற்றப்படுகிறது.
  7. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக முன்பதிவு செய்த பேருந்துக்கு பதிலாக மாற்றுப் பேருந்து இயக்கம் போது பேருந்து வகையும் முன்பதிவு செய்த இருக்கை மாற்றத்தக்கது / மாற்றத்திற்குரியது.
  8. முன்பதிவு சலுகைக் கட்டணம் அடிப்படை கட்டணத்தில் மட்டுமே வழங்கப்படும்.
  9. முன்பதிவு செய்த பயணிகள் பேருந்து புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக நடத்துனர் அல்லது நேர காப்பாளர் அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
  10. பயணிகள் மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி (மொபைல்) பயணசீட்டு உடன் பயணம் செய்கிறார்களானால், அவர் பயணத்தின் போது ' மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி (மொபைல்) பயணசீட்டு' குறிப்பிடப்பட்டுள்ள அசல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் .
  11. tnstc.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புறப்படும் நேரம், இயங்கும் நேரம் மற்றும் வருகை நேரம் ஆகியவை நிலையான இயக்க நிலைக்கு உட்பட்டது. சாலைத் தடை, போக்குவரத்து நிலை, இயற்கைப் பேரிடர் மற்றும் வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக இந்த நேரங்கள் மாறுபடலாம்.
  12. SMS டெலிவரி உங்கள் மொபைல் சேவை ஆப்ரேட்டர் மற்றும் மொபைல் கேரியர் நெட்வொர்க் கிடைப்பதன் மூலம் பயனுள்ள பரிமாற்றத்திற்கு உட்பட்டது. முன்பதிவு SMS உங்களுக்கு வரவில்லை என்றால், புதிய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், " பயணச்சீட்டை பார்வையிட" என்பதைச் சரிபார்க்கவும்.
  13. பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறும் இடத்தில் இருந்து பயணிகள் பேருந்தில் ஏற வேண்டும். முன்பதிவு செய்யும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த ஏறும் இடத்தில் இருந்து பேருந்தில் ஏறத் தவறினால் SETC & TNSTC பொறுப்பேற்காது. நீங்கள் தேர்ந்தெடுத்த ஏறும் இடத்தில் இருந்து ஏறவில்லை என்றால், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு அதே இருக்கை ஒதுக்கப்படும்.பேருந்து புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் பயணிகளால் தேர்வு செய்யப்பட்ட ஏறும் இடத்தில் இருக்க வேண்டும்.
    பொங்கல் தீபாவளி மற்றும் இதர பண்டிகை நாட்களில் நிர்வாகம் போர்டிங் பாயின்ட்களை மாற்றம் செய்யும் பொழுது அனைத்து பயணிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்படும்.
குறுஞ்செய்தி (SMS) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
  1. TNSTC வழங்கும் குறுஞ்செய்தி (SMS) சேவை பயணிகளுக்கு கூடுதல் வசதி மட்டுமே மற்றும் இது கட்டாய சேவை அல்ல.
  2. பயணிகள் முன்பதிவின் போது பதிவு செய்த / கொடுத்த கையடக்க தொலைபேசி எண்ணுக்கு மட்டுமே குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும்.
  3. அலைபேசி நிறுவனத்தின் நெட்வொர்க்கில் உள்ள நெரிசலை பொறுத்தும் மற்றும் தொழில்நுட்ப வசதியை பொறுத்தும் குறுஞ்செய்தி(SMS) சேவை வழங்கப்படும். இதற்கு TNSTC ஆல் எந்த ஒரு உத்தரவாதம் அளிக்க முடியாது.
  4. முன்பதிவு செய்த பயணிகளுக்கு, அவர்களின் பயணம் தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி (SMS) சேவை ஏற்படும் கால தாமதம் அல்லது குறுஞ்செய்தி பெறவில்லை என்ற நிகழ்விற்கு TNSTC பொறுப்பாகாது.
  5. குறுஞ்செய்தி(SMS) சேவை (இணையதள முன்பதிவுக்கும், அலைபேசி முன்பதிவுக்கும் மற்றும் இதர இணையதள முன்பதிவு, பயணசீட்டு தொடர்பாகவும், பயண பட்டியல் விவரத்துக்கும் , பேருந்து புறப்பாடு போன்ற சேவைகள்) பயணிகளின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி சேவை வழங்கும் நிறுவனத்தின் தொழில்நுட்ப வசதியை பொறுத்து குறுஞ்செய்தி (SMS) சேவை வழங்கப்படும். விநியோகத்தில் ஏற்படும்குறைபாடுகளுக்கு TNSTC பொறுப்பேற்காது.
  6. இணையதள முன்பதிவுக்கும், அலைபேசி முன்பதிவுக்கும் மற்றும் இதர இணையதள முன்பதிவு, பயண பட்டியல் போன்ற குறுஞ்செய்தி (SMS) சேவைகள் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படலாம்.
  7. எஸ்எம்எஸ் சேவைக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை, வெளிப்படையான அல்லது மறைமுகமானது. எந்தவொரு காரணத்திற்காகவும் குறுஞ்செய்தியைப் பெறாததால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் இழப்பு, சேதம் அல்லது செலவுகளுக்கு எஸ்.இ.டி.சி பொறுப்பேற்காது அல்லது பொறுப்பேற்காது அல்லது உங்களுக்கு எந்த கடமையும் இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எஸ்.இ.டி.சி மறைமுக அல்லது விளைவாக ஏற்படும் சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  8. மேற்கூறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயணிகளுக்கு முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது.
மின்னனு பயணசீட்டு மற்றும் கையடக்க தொலைபேசி பயணசீட்டுகள் தொடர்பாக பணத்தைத் திரும்பப் பெறுதல்
பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படும்
நேரத்தின் 48 மணி நேரத்திற்கு முன்.
10 % கட்டணம் குறைப்பு
பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படும்
நேரத்தின் 24 மணி முதல் 48 மணி வரை.
20 % கட்டணம் குறைப்பு
பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படும் நேரத்தின் 60 25 % கட்டணம் குறைப்பு
முன்பதிவுக் கட்டணம், டிக்கெட் ரத்துக்கான பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் எந்தச் சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்படாது.

பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படுவதற்கு ஒரு (1) மணி நேரத்திற்கு முன்பு மட்டும் மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி பயணசீட்டு ரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகு ரத்து செய்ய அனுமதிக்கப்படாது.பயணத்தேதி அன்று இரவு 9 மணிக்கு முன்பு வரை மட்டும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும் அதன் பிறகு அன்று இரவு 10 மணிக்குப் மேல், அடுத்த நாள் காலை 7 மணி வரை ரத்து செய்ய முடியாது.

  1. மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி பயணசீட்டு திரும்பளிக்கும் தொகை பயணியின் குறிப்பிட்ட வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை கணக்கில் 3 முதல் 7 வங்கி வேலை நாட்களுக்குள் திருப்பித் தரப்படும்.
  2. வாடிக்கையாளர் கணக்கிற்கு தொகையை மாற்றுவதற்கான நேரம் சம்பந்தப்பட்ட வங்கியின் கொள்கையைப் பொறுத்தது. வங்கியின் தாமதத்திற்கு SETC பொறுப்பல்ல.
  3. செயல்பாட்டு காரணங்களுக்காக பேருந்து சேவையை கழகத்தால் ரத்து செய்தால், பயணியின் பணத்தைத் திரும்பப்பெறும் உரிமைகோரல் கடிதத்தைப் பெற்ற பின்னரே சம்பந்தப்பட்ட கடன் அட்டை / வங்கி கணக்கில் பணத்தை வழங்கப்படும்.
  4. முன்பதிவு செய்யும்போது இருக்கை / பயணசீட்டு உறுதி செய்யப்படாத நேரங்களில் பிடிக்கப்பட்ட தொகையை தங்கள் வங்கி / கணக்கு அட்டைக்கு 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். 15 வேலை நாட்களில் இந்த தொகை வரவு வைக்கப்படாவிட்டால், தயவுசெய்து உங்கள் முகவரி மற்றும் பரிவர்த்தனையின் முன்பதிவு குறிப்பு எண்ணை (OB எண்) மேற்கோள் காட்டி, கீழேயுள்ள முகவரியில் வணிக மேலாளருக்கு பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கை கடிதத்தை அனுப்பவும்.
  5. வங்கி தரப்பில் இருந்து பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் காலதாமத்திற்கு SETC பொறுப்பேற்காது.
  6. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக கழகத்தால் எந்தவொரு சேவையும் ரத்துசெய்யப்பட்டால் மற்றும் ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்குப் பதிலாக மாற்று சேவை எதுவும் இயக்கப்படவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட சேவையில் ஒதுக்கப்பட்ட பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம் (பொருந்தக்கூடிய சேவைக் கட்டணத்தைக் கழித்த பிறகு) பணத்தைத் திரும்பப்பெறுதல் கோரிக்கை கடிதம் உடன் அசல் பயணசீட்டை இணைத்து பின்வரும் முகவரிக்கு பயணத்தேதியில் இருந்து 25 (இருபத்தைந்து) நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
  7. முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு அறிக்கையை வாடிக்கையாளர்கள் சரிபார்க்க வேண்டும். Gpay, PhonePe, Paytm அல்லது வேறு ஏதேனும் UPI/QR பேமெண்ட்கள் போன்ற UPI பயன்முறையில் பணம் செலுத்தியிருந்தால், பணப் பரிமாற்றம் தோல்வியுற்றால் அல்லது ரத்து செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப்பெறும் தொகைக்கான உங்கள் வங்கி அறிக்கையைச் சரிபார்க்க வேண்டும்.
  8. பணம் டெபிட் ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை.
    வ எண். எனது
    பரிவர்த்தனையின்
    நிலை
    காரணம் TNSTC இன் நடவடிக்கை வங்கியின் நடவடிக்கை
    1 பணம் செலுத்தப்பட்டது 
    ஆனால் டிக்கெட் முன்பதிவு ச
    ெய்யப்படவில்லை
    1. முன்பதிவு செய்யும் 
    போது பயணிகள் குறிப்பிட்ட 
    இருக்கை/பெர்த்தை 
    தேர்ந்தெடுத்தனர் மற்றும் 
    இருக்கை/பெர்த் தேர்வு 
    இல்லாததால் டிக்கெட் 
    முன்பதிவு 
    செய்யப்படவில்லை.
    2. பரிவர்த்தனைகள் 7
    நிமிடங்களுக்குள் 
    முடிக்கப்படவில்லை 
    இருக்கைகள் 
    வெளியிடப்படும்.
    3. நெட்வொர்க் 
    தோல்விகள் போன்ற
    பிற காரணங்கள்.
    தொகை மீண்டும் 
    வரவு வைக்கப்பட்டுள்ளது
    அடுத்த நாள் அந்தந்த
    இடத்திற்கு வங்கி.
    வங்கி 3-5க்குள் 
    தொகையை திரும்பக் 
    கிரெடிட் செய்கிறது
    முன்பதிவு செய்யும்
    வங்கியின் வேலை 
    நாட்கள் செய்யப்பட்டது.
    2 தீர்வு தோல்வியடைந்தது
    மற்றும் டிக்கெட் இல்லை
    முன்பதிவு செய்யப்பட்டது.
    1. டிஎன்எஸ்டிசிக்கு டிக்கெட் 
    தொகையை அனுப்பும் 
    முன் வங்கிகளின் முடிவில் 
    அல்லது பேமெண்ட் 
    கேட்வேயில் சிஸ்டம் 
    அல்லது நெட்வொர்க் தோல்வி.
    தொகை வரவு 
    வைக்கப்படவில்லை
    TNSTC கணக்கு.
    தொகை வங்கியில் 
    உள்ளது. வங்கி திருப்பிச் 
    செலுத்தும் சரியான 
    சரிபார்ப்புக்குப் பிறகு 
    3 முதல் 5 வங்கி வேலை 
    நாட்களுக்குள் பணம்n.

துணை மேலாளர் (வணிகம்)
அரசு விரைவு போக்குவரத்துக்குக் கழகம் தமிழ்நாடு லிமிடெட்.,
தலைமை அலுவலகம், திருவள்ளுவர் இல்லம்
பல்லவன் சாலை
சென்னை - 600002.

வங்கி தொலைபேசி எண் (முன்பதிவு சம்பந்தமாக மட்டும்) :
044-49076326 / 49076316. pgsupport@billdesk.com
தொலைபேசி எண் (முன்பதிவு சம்பந்தமாக மட்டும்) : 9513508001
முன்பதிவு தொடர்புடைய பேசிஸ்பே வங்கி தொலைபேசி எண் : 7305068045 மின்னஞ்சல் : support@basispay.in


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
வணிக மேலாளர்களின் தொடர்பு விபரங்கள்:

* குறிப்பு: தொடர்பு கொள்ளும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

Sl.No. Corporation Region Contact No.
1TNSTC VillupuramVellore9445021303
2Kancheepuram9445021353
3Tiruvannamalai9445021403
4Villupuram9445021208
5Cuddalore9445021212
6TNSTC SalemDharmapuri9489900749
7Salem9489800711
8TNSTC CoimbatoreCoimbatore9442268635
9Erode9442501922
10Tiruppur9442110877
11Ooty9442501893
12TNSTC KumbakonamKumbakonam9487897851
13Karur9487898046
14Karaikudi9487898090
15Trichy9487898040
16Pudukottai9487898143
17TNSTC MaduraiMadurai9487599022
18Dindigul9487599103
19Virudhunagar9487599132
20TNSTC TirunelveliTirunelveli9489052016
21Nagercoil9487599082
22Thoothukudi9489052015
23MTCMTC - Chennai9445030523